www.sltda.lk/statistics இல் உள்நுழைவதன் மூலம் இலங்கை சுற்றுலா தொடர்பான தகவல் மற்றும் தற்போதைய புள்ளிவிபரங்களை இலகுவாகப் பெற முடியும்
பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களின் அரசியலமைப்பு உத்தரவாதம்) மூலம் வெளிநாட்டு முதலீட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. உறுப்புரை 157 (இலங்கை அரசியலமைப்பு) கீழ், தேசிய பாதுகாப்பு நலன்கள் அல்லாமல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதற்கு எந்தவொரு சட்டமன்ற நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கையும் எடுக்க முடியாது./p>
வணிக நிறுவனங்கள் தொடர்பான சட்டங்கள், நாட்டவர்கள் அல்லாதவர்கள் தனியுரிமை வணிகங்களை நடத்த அனுமதிப்பதில்லை. எவ்வாறாயினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தகத்தை நடத்துவதற்கு இலங்கையில் வசிக்கும் நிறுவனத்தை இணைத்துக்கொள்ள முடியும்.
இலங்கையின் கம்பனிகள் சட்டத்தின் கீழ், ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனத்தை பதிவு செய்ய முடியும், குறைந்தபட்சம் இரண்டு பங்குதாரர்களுடன் ஒருங்கிணைத்து, அவர்கள் நிறுவனத்தின் முழு பங்கு மூலதனத்தையும் சொந்தமாக வைத்திருக்க முடியும். இணைந்ததைத் தொடர்ந்து, நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து சட்டப்பூர்வ தேவைகளுக்கும் இணங்க வேண்டும்.
ஆம்! முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17வது பிரிவின் கீழ், சுற்றுலா போன்ற பொருளாதாரத்தின் பல துறைகளில் 100% வெளிநாட்டு FAQகள் பங்கேற்பதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்கிறது. அத்தகைய முதலீடுகளுக்கு BOI தானாகவே அனுமதி வழங்கும். பயண முகவர்கள், உள்வரும் சுற்றுலா இயக்குனர்கள் உட்பட வெளிநாட்டு முதலீடு 40% வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்த முதலீட்டின் அளவு, முதலீட்டின் வகை மற்றும் முதலீட்டின் இடம் போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களை கொண்ட BOI நிறுவனங்கள் 3-7 ஆண்டுகள் வரையிலான வரி விடுமுறைக்கு தகுதி பெறுகின்றன. கூடுதலாக, இந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை 12% வருமான வரி சலுகை விகிதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இல்லை. வருமானம், கட்டணம் மற்றும் மூலதனம் மற்றும் நடப்புக் கணக்குப் பணம் செலுத்துதல் தொடர்பான அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் போன்றவை 100% திருப்பி அனுப்பப்படுவதை அரசாங்கம் அனுமதிக்கிறது.
இலங்கையின் வரி ஒப்பந்தங்கள் விடுகை வழங்குவதற்கு இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றன:
வசிக்கும் நாடு ஒரு குடியிருப்பாளரின் வெளிநாட்டு வருமானம் உட்பட மொத்த வருமானத்திற்கு வரி விதிக்கிறது. (இருப்பினும், வசிப்பவர் தனது வெளிநாட்டு வருமானத்தின் மீது செலுத்தும் வெளிநாட்டு வரிக்கு எதிரான கடன் அனுமதிக்கப்படுகிறது.) வெளிநாட்டு வரி உள்நாட்டு வரியை விட குறைவாக இருந்தால், அத்தகைய வரிக்கு மேலதிகமான வரி மட்டுமே வசிக்கும் நாட்டிற்கு செலுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு வரி அதிகமாக இருக்கும் சந்த்தர்ப்பத்தில், வசிக்கும் நாட்டில் வரி வசூலிக்க முடியாது.
வரி செலுத்துபவரின் பிற வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியை நிர்ணயம் செய்கையில் வரி விலக்கு அளிக்கப்பட்ட வருமானம் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வரி விடுமுறைகள் மற்றும் வரிச் சலுகைகள் வடிவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு மாறான இரட்டை வரிவிதிப்பு கடன் இழப்பைத் தடுக்க சில இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரிச் சிக்கனக் கடன் விடுகை வழங்கப்படுகிறது. இத்தகைய வரவுகள் பொதுவாக ஈவுத்தொகை, வட்டி அல்லது ஆதாய உரிமை அல்லது வரி விடுமுறையின் கீழ் வழங்கப்பட்ட வரி அல்லது ஈவுத்தொகை செலுத்தப்பட்ட துணை நிறுவனங்களின் இலாபங்களுக்கு வழங்கப்படுகின்றன.
இலங்கை வெளிப்படையான, குறைந்த வரி விதிப்பைக் கொண்டுள்ளது, மேலும் 26 நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு விடுகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஈவுத்தொகை, வட்டி மற்றும் ஆதாய உரிமை மீதான குறைந்த வரி விகிதங்களை வழங்குகின்றன. உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் கீழ் சிறப்புச் சலுகைகளுக்குத் தகுதிபெறும் BOI சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்களைத் தவிர அனைத்து இலங்கை வணிகங்களும் வரிவிதிப்புக்குரியதாகும்.
குடியிருப்பாளர் மற்றும் நிறுவனங்கள் 28% பெருநிறுவன வருமான வரிக்குரியதாகும். குடியுரிமை பெறாத நிறுவனங்கள் (தலைமை அலுவலகங்கள் வெளிநாட்டில் அமைந்துள்ள அல்லது வெளிநாட்டில் இருந்து கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள்) வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு அல்லது வரி விதிக்கக்கூடிய லாபத்தில் ஒன்பதில் ஒரு பங்கு - எது குறைவாக இருந்தாலும் அதற்கு மேலதிக வரி செலுத்துகிறது.
ஆம், இலங்கை பிரஜை அல்லாதவர்கள் இலங்கையர்கள் செலுத்தும் அதே வரி விகிதத்தையே செலுத்துகின்றனர்.
ஒரு வருடத்திற்குள் பல சந்தர்ப்பங்களில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் நோக்கத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் எந்தவொரு வெளிநாட்டவரும் 12 மாதங்கள் வரை செல்லுபடியாகும் மற்றும் ரூ10,000/- (USD 100) பல் நுழைவு விசா (Multiple Entry visa) விற்கு தகுதியுடையவராவார்.
விசாவை எளிதாகப் பெற முடியும். அதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அல்லது இலங்கை தூதரக அலுவலகத்திலிருந்தும் பெற முடியும்.
ஆம்! அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்டங்களுக்கு பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள், இலங்கை முதலீட்டு சபையின் கீழ் உள்ள செயற்திட்டங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் அல்லது இலங்கையில் பண மூலதனத்தை முதலீடு செய்யும் அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளுக்கும் வதிவிட விசாக்கள் பெறமுடியும்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார அபிவிருத்திக்கு பங்களிக்கவிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான ஊக்கத்தொகையாக குடியுரிமை விருந்தினர் (Resident Guest) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அனைத்து வெளிநாட்டினருக்கும் திறந்திருக்கும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார செழுமைக்கு பங்களிக்கக்கூடிய எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும்/தொழில் நிபுணரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
வதிவிட விசாவைப் பெறுவதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு செயலாளரின் ஒப்புதலுடன் வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தால் வழங்கப்பட்ட நுழைவு விசாவில் இலங்கைக்கு வருவது அவசியமாகும். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு செயலாளரின் அனுமதியின்றி வழங்கப்படும் உள்வருகை விசாக்கள், குடியிருப்பு விசாக்களாக மாற்றுவதற்காக பரிசீலிக்கப்படமாட்டாது.